Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, April 17, 2012

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி

பதிவிட்டு ரொம்ப நாள் ஆனதால நம்ம பக்கத்துக்கு ஆளுங்களை மறுபடி இழுக்கணும் இல்லையா? அதனால ஒரு சின்ன போட்டி.
 


வேலை பளு தெரியாம இருக்க நம்மில் பெரும்பாலானோருக்கு கம்பெனி குடுக்கற  ஒரு(ரே) ஆள் இளைய ராஜா. நமக்கு வயசாகுது, நம்ம ரசனை மாறுதுங்கறதை இந்த ராட்சசனோட பாட்டை ரசிக்க ஆரம்பிக்கறதுலயே தெரிஞ்சுக்கலாம். ஸோ, நான் இங்க சில பாடல்களின் இடையில் வரும் வரிகளை குடுக்கறேன். முதல் வரிகளை கண்டுபிடிங்க. ஓகே?


1. உந்தன் சங்கீத சலங்கை ஒலி
    இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
 
2. உன்னை காணாதிருக்கும் நொடி நேரம்
    பல மாதம் வருடம் என ஆகும்

3. ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பேரை சொல்லாதோ
    பூவசந்தமே நீ மறந்ததேன்
 
4. நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
    நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்

5. காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ 
    மாலை மயக்கம் நீ பொன்மலரும் நீ என் நினைவும் நீ

6. வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 
    கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் 

7. தேடினேன் ஓ என் ஜீவனே 
    தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே

8. தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம்
    உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்

9. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
      தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
  
Last But not Least

10. பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே 
      சிறகிரண்டை விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே

அனேகமா ஒண்ணே ஒன்னு தான் கொஞ்சம் கஷ்டம். மீதி எல்லாம் ரொம்ப ஈசியாதான் குடுத்திருக்கேன். try பண்ணுங்க...


 

Wednesday, March 28, 2012

நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 3 (டைரி பதிவு)

அதிகாலை 4 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை என்று சொல்லி இருந்தார்கள். எங்களுடன் வந்திருந்த அத்தை குடும்பம் எப்போதுமே குளிர், சளி என்று பயப்படுபவர்கள். அவர்களுடன் பயணம் முழுவதும் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொள்ள வேண்டி இருக்கும் என்பது தெரியும். எனவே அவ்வளவு அதிகாலை நடக்கும் பூஜையை தரிசிக்க முடியவில்லை.

அவர்கள் பிளான் 8 மணியளவில் கிளம்பலாம் என்பது. நான் அப்போதைக்கு சரி சரி என்று சொல்லி விட்டு அதிகாலை 6 மணிக்கு அவங்க ரூமுக்கு போன் செய்து கிளம்ப தயாராக சொன்னேன். ராமேஸ்வரத்துக்கு பரிகாரத்துக்கு போகும் எல்லோரும் கடலில் குளிக்கவே போவாங்க. ஆனா, இவங்க கடல் தண்ணி infection ஆகிடும் ன்னு லாட்ஜிலேயே வெந்நீரில் குளிச்சுட்டு எங்க கூட கடலுக்கு வந்தாங்க. அந்த அளவு அவங்க ஹைஜீனிக் ;-)

கடல் எப்ப வரும், அலை சத்தம் இன்னும் கேட்கலையே ன்னு ஆர்வத்தோட கடலை நோக்கி போனோம். அந்த குறிப்பிட்ட சந்து திரும்பும் வரை கடல் இருப்பதற்கான அறிகுறியே தெரியல. திடீரென்று தான் கடல் தெரிந்தது. அந்த கடலில் அலை அடிக்காது என்பதால் அமைதியாகவே இருந்தது. நேரில் பார்க்கும்போது ஒரு பெரிய ஏரி அல்லது ஆறு போலதான் இருந்தது.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கும் இடம் ஆகையால், பசுக்களும், ஆடுகளும், காகங்களுமாக ஒரே கூட்டம். ஒரே பரிகாரத்துக்கு ஒவ்வொரு ப்ரோகிதரும் ஒவ்வொரு ரேட் வெச்சிருக்காங்க. அனேகமா வாய்ல வந்த அமௌண்ட படிஞ்சா லாபம் ன்னு கேக்கறாங்க. அவங்கள விட்டுட்டு வேறொருத்தரை கேட்டா இவரை விட அவர் குறைஞ்ச ரேட்ட சொல்றாங்க. ஒரு கால் மணி நேரத்துல ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கறது அங்க தான் நடக்குது.
 கச கசன்னு ஒரே ஈரமா கண்ட குப்பையும் கிடந்துச்சு. நாம கொஞ்சம் முகம் சுருக்கினா ஒரு பலகை போட்டு அதுல உக்கார சொல்லி ஸ்ரார்தம், பரிகாரம்  பண்ணறாங்க. அங்க நிகேஷ் எப்படி உக்காந்திருந்தான் தெரியுமா?
பாத்தீங்களா? தீர்த்தம் தெளிச்சா சளி புடிச்சுக்கும்னு அவன எந்த கெட்டப்புல உக்கார வெச்சிருக்காங்கன்னு.... ஹஹஹா...
அவங்க பரிகாரம் செய்யும்போது நாங்க கடல்ல குளிச்சுட்டு வந்தோம். எங்க ஊர்ல கடல் இல்லை. அதனால சந்தோஷமாவும் பயமாவும் நானும் அம்மாவும் குளிச்சோம். தண்ணிக்குள்ள குனிஞ்சு மண்ணெடுத்தா அந்த மண்ல சின்ன சின்னதா நிறைய சங்கு இருந்துச்சு. அந்த மாதிரி மண்ணை நான் பார்த்ததே இல்லை. அப்பறம் கரைக்கு போய் ஸ்ரார்தம் பண்ணிட்டு கோவிலுக்குள்ள போனோம். அங்க நடந்துச்சு பாருங்க அநியாயம்.....
(தொடரும்)