Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 20, 2011

விபத்து... நடந்தது என்ன? (I am Back - மூன்றாம் பாகம்)

போன பதிவின் தொடர்ச்சி என்பதால் அந்த பதிவை இங்க கிளிக் பண்ணி படிச்சுட்டு இங்க வாங்க நண்பர்களே ..

வழக்கம்போல செவ்வாய்கிழமை வந்தது. என் தோழி 'பெருந்துறைல இருக்கற அந்த பொண்ணு  ஊருக்கு போய்ட்டதால, இந்த முறை அங்க வண்டி கிடைக்காது. அதனால எப்பவும் போல இல்லாம  இன்னைக்கு நாம நம்ம வீட்ல இருந்தே என் வண்டில போலாம். பெருந்துறை வழியா சுத்திட்டு போக வேணாம். போன முறை போலிஸ் கிட்ட மாட்டினது வேற சங்கடமா இருக்கு. அதனால வெள்ளோடு வழியா போலாம்'ன்னு சொன்னா. நானும் சரின்னு சொல்லிட்டேன். 

முருகனுக்கு விளக்கு போட வழக்கமா விளக்கு வாங்கற கடைல விளக்கு வாங்கிட்டு அவ திரும்பும்போது பால் பாக்கெட் வச்சிருக்கற டப்பால கால் தடுக்கி தாய்மண்ணை முத்தமிட போனா. தடுத்து புடிச்சு, 'என்னடி தடுக்குது. அடுத்த வாரம் போய்க்கலாமா?'ன்னு கேட்டேன். 'அட இதுக்கெல்லாம் பயந்துகிட்டு. வா. போலாம்'ன்னா. 

சரின்னு நானும் பேசாம வண்டில உக்காந்துகிட்டேன். அடுத்து அம்மணி கோர்ட்ல ஏதோ வேலைன்னு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனா. நான் உள்ள வரலைன்னு சொல்லி வெளிலே வெயிட் பண்ணிட்டிருந்தேன். திரும்பி வந்து வண்டிய ஸ்டார்ட் பண்ண போகும்போது அவளோட கொலுசு கட் ஆகி நழுவி விழுந்துச்சு. 'ஏய், ரெண்டாவது சகுனமும் முருகன் காமிச்சுட்டாண்டி. வீட்டுக்கு போலாம்'ன்னு நான் சொன்னேன். அதுக்கு அவ, 'மூணாவது சகுனமும் காமிச்சுட்டா உன்ன அங்கேயே பஸ் ஏத்தி வீட்டுக்கு அனுப்பிடறேன். போதுமா'ன்னு சொன்னா. சரின்னு அரை மனசோட வண்டில உக்காந்தேன்.
வண்டி நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. இது புது வழிங்கறதால, சென்னிமலை போறதுக்குள்ள ரெண்டு மூணு முறை வழி தவறி திரும்பி திரும்பி சரியான வழி கேட்டு  போனோம். போக போக, அவ 'ஆமா, எப்ப பார்த்தாலும் நானே வண்டி ஓட்டிகிட்டு இருக்கேனே, நான் என்ன உனக்கு டிரைவரா? திரும்பி வரும்போது நீதான் ஓட்டனும்'ன்னு திட்டிகிட்டே வந்தா. 

actually , எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. அதனால எங்க அப்பா என்மேல care பண்றேன் பேர்வழின்னு, என்னை பொத்தி பொத்தி தான் வளர்ப்பார். (அதனால நல்லது நடந்ததை விட கெட்டது நடந்தது தான் ஜாஸ்திங்கறது வேற விஷயம்). இப்படிப்பட்ட அப்பாவ மீறி  நான் இப்ப தான் வண்டி வாங்கி கொஞ்ச நாளா தான் ஓட்டிகிட்டு இருக்கேன். டபுள்ஸ் வைக்கறதுன்னா 'நான் வண்டி ஓட்ட பழகிட்டு இருக்கேங்கற விஷயம்' யாருக்கு தெரியாதோ அவங்கள வெச்சுதான் ஓட்டுவேன். இந்த விஷயமெல்லாம் இவளுக்கும் தெரியும். தெரிஞ்சும் இந்த முறை கண்டிப்பா வண்டி ஓட்டியே தீரணும்னு கட்டளையே போட்டுட்டா. 

சென்னிமலை போனோம். முருகனை தரிசிச்சோம். திரும்பி வரும்போது, மலைல இருந்தே ஓட்ட சொன்னா. உனக்கு உயிர் மேல பயம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் எப்படி ஓட்டுவேன்னு எனக்கு தெரியும்.  ஊருக்கு வெளில வந்தபிறகு வேணா நான் ஓட்டறேன்'ன்னு சொல்லிட்டேன். ரெண்டுபேரும் மலைல இருந்து இறங்கி, பேக்கரில பப்ஸ் சாப்ட்டுட்டு, போற வழில பசிச்சா சாப்பிட முறுக்கு பாக்கெட் வாங்கி வண்டில போட்டுட்டு வண்டிய கிளப்பினோம். வண்டி சிட்டி லிமிட்ட தாண்டி வெள்ளோடு பிரிவுல திரும்பினதும், வண்டிய நிறுத்தி என்கிட்டே குடுத்தா. 

அவ குண்டு பக்கடி. நான் ஒல்லி பிச்சான். நான் டிரைவர் சீட்ல உக்காந்ததும், இவ உக்கார போனா. நான் வண்டிய கீழ போட போனேன்... (முருகன் மூணாவது சகுனம் காட்டினது எங்களுக்கு தெரியாம போய்டுச்சு). கெக்கேபெக்கேன்னு  சிரிச்சுகிட்டு மறுபடியும் பேலன்ஸ் பண்ணி வண்டி எடுத்து ஓட்ட ஆரம்பிச்சோம். இத்தனைக்கும் ஸ்பீடாமீட்டர் 25 தாங்க காமிச்சுச்சு. ரொம்ப ஸ்பீடாவெல்லாம்  போகலைங்க.

ஒரு ரெண்டு கிலோமீட்டர் தான் போய் இருப்போம். அசோகபுரம்னு ஒரு ஏரியா வந்துச்சு. ரோடு அகலம் கொஞ்சம் குறைவு. ஒரு வளைவு வேற. ஒரு அம்மா தண்ணி எடுத்துட்டு வந்துட்டு இருந்தாங்க. அவங்க கூட ஒரு அஞ்சு ஆறு வயசுல ஒரு சின்ன பொண்ணு. அந்த பொண்ணு அவங்க அம்மா கைய உதறிட்டு ரோட கிராஸ் பண்ண பார்த்துச்சு. நான் ஹார்ன் அடிக்கறேன். வந்துடாதன்னு தலைய வேற ஆட்றேன். அது எங்கள பார்த்து சிரிச்சுகிட்டே குடுகுடுன்னு ரோட கிராஸ் பண்ண வந்துடுச்சு. என் பிரெண்டு கத்தறா. நான் ப்ரேக் போட்டா, என் பிரெண்டு கண்டிப்பா விழுந்துடுவா. பக்கமா போய்ட்டதால அந்த குட்டி பொண்ணு கண்டிப்பா நின்னுடும். நாம நிறுத்தவேணாம்ன்னு நினைச்சு ப்ரேக் போடலாமா வேணாமா ன்னு யோசிச்சு கிட்டே வண்டிய ஓட்டறேன் (இந்த இடத்துல திட்டாதீங்க ப்ளீஸ்). 

இந்த நேரத்துல, ஒண்ணா அந்த பொண்ணு கிராஸ் பண்ணி இருக்கணும். இல்லாட்டி அப்படியே நின்னிருக்கணும். வண்டி பக்கத்துல வந்ததும், அந்த பொண்ணு தேவை இல்லாம  ஒரு செகண்ட் நின்னு, கரெக்டா வண்டில இடிக்கற நிலைலேயே வந்துட்டா. நான் ப்ரேக்கையும் பிடிச்சுட்டேன். ஆனா, நான் அவசரத்துல புடிச்சது பிரன்ட் ப்ரேக். சடார்ன்னு ஒரு சவுண்ட். 'ஆ.... அம்மா........' ன்னு அந்த பொண்ணோட அலறல். நானும் என் ப்ரெண்டும் கத்தினமான்னு ஞாபகம் இல்ல. 

அடுத்த செகண்ட் அந்த பொண்ணு அந்த இடத்துலயும், என் பிரெண்ட் ரெண்டு பல்டி அடிச்சு புல்வெளி பக்கமாவும், நான் ஒரு அரை நிமிஷத்துக்கு சறுக்கிகிட்டே ரோட்டு பக்கமாவும் விழுந்தோம். (அந்த அரைநிமிஷம் 'போச்சுடா. நாம கொலை கேசுல மாட்டிகிட்டோம்'ன்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். கூடவே அந்த ரணகளத்துலயும்  தலைல அடிபட்டுட கூடாதுன்னு தலைய தூக்கிகிட்டேன்)  வண்டி என் கால்ல விழுந்து என்னால எந்திரிக்க முடில. என் பிரெண்டு அந்த பொண்ண 'அறிவு இருக்கா அப்படியா இப்படியா'ன்னு திட்டிகிட்டு இருக்கா. அங்க இருந்த கொஞ்சநஞ்ச பேர் உடனடியா திரண்டு எங்களை எல்லாம் தூக்கிட்டாங்க. அந்த சின்ன பொண்ணுக்கு நல்ல வேளை ஒண்ணும் ஆகல. தலைல வலி மட்டும்தான்னு சொல்லுச்சு. அப்ப ஒரு மகராசன் சொன்னாரு , " இந்த பொண்ணுங்க மேல தப்பு இல்ல. அந்த சின்ன பொண்ணுதான் திடீர்னு கிராஸ் பண்ணிடுச்சு"ன்னு . எனக்கு அப்பாடான்னு ஆகி போச்சு. அப்படின்னா கொலைகேசுல இருந்து தப்பிச்சுட்டோம்னு திருப்தி வந்துச்சு.

ஆனா,  இதைவிட பெரிய பிரச்சனைய சந்திக்க போறோம்ன்னு அப்ப எனக்கு தெரியல.அவ வீட்லயாவது பரவாயில்ல. வண்டில போறோம்ன்னு தெரியும். நாங்க வண்டில போறோம்ன்னு எங்க வீட்ல சொல்லாம தான வந்திருக்கோம்.  ரத்த சகதியா நிக்கற நான், ஸ்ட்ரிக்டா இருக்கற எங்க அப்பாகிட்ட எப்படி சொல்லுவேன்? என் முகத்தில் மெதுவாக பீதியின் நிழல் படர்ந்தது.

(அடுத்த பதிவில் முடிக்க முயற்சி செய்கிறேன். தொடரும்)
ஒரு  டவுட்: இன்ட்லி வோட்டு பட்டன் ஏன் work ஆவதில்லை?

10 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லவேளை சின்னப் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகலையில்ல... அது போதுங்க்கா.
சரி... சரி... நல்லவேளை நீங்களும் தப்பிச்சீங்க.

SURYAJEEVA said...

//(முருகன் மூணாவது சகுனம் காட்டினது எங்களுக்கு தெரியாம போய்டுச்சு).//

அதுக்கு முன்னாடியே உங்கள vandi ஓட்ட சொன்னாங்க பாருங்க, அங்கேயே காட்டிடுச்சு, இது நாலாவது சகுனம்.. நல்லா பாக்கிராங்கய்யா சகுனம்.. முடியுறதுக்குள்ள எத்தன சகுனம் பாக்கனுமோ.. என்னமோ போங்க, முடிக்கும் போது மட்டும் நல்லா இல்ல.... அப்புறம் பாருங்க..

வெங்கட் நாகராஜ் said...

அட ஒரு வழியா சின்னப் பொண்ணு மேலே இடிச்சத சொல்லிட்டீங்க... :))

வண்டி ஓட்டும் போது அடுத்தவங்களுக்கும் சேர்த்து யோசிக்கணும்....

மாய உலகம் said...

(அதனால நல்லது நடந்ததை விட கெட்டது நடந்தது தான் ஜாஸ்திங்கறது வேற விஷயம்).//

பொத்திபொத்தி வளர்த்த புள்ள மணிமேகல.. அதனால இன்னும் வெக்கம்விட்டு போகல

raju said...

தொடர் உச்சகட்டத்தை அடைத்துள்ளது...

இராஜராஜேஸ்வரி said...

(முருகன் மூணாவது சகுனம் காட்டினது எங்களுக்கு தெரியாம போய்டுச்சு).!!!!!!

சுபத்ரா said...

அடப்பாவி! அந்தச் சின்ன பொண்ணுக்கோ அல்லது உங்க ரெண்டு பேருக்கோ ஏதும் அடிபட்டுடக்கூடாதுனு நினைச்சா பரவால்ல. அதவிட்டுட்டு கேஸ்ல மாட்டிட கூடாதேனு நினைச்சிருக்கீங்களே!! :-)

Raja Murugan said...

செம காமெடி ஹா ஹா ஹா..

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

மின்துறை செய்திகள் said...

பலதிரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி? இங்கு சென்று பாருங்கள்http://ganeshdigitalvideos.blogspot.com/2011/12/blog-post_26.html