Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, September 2, 2013

தயிராக மாற்ற முடியாத பால் எது?

அமலா பால்னு சொல்லி அடி வாங்காதீங்க. உங்களுக்காக சில கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்ல முடிகிறதா பாருங்கள்.

1. முன்னால், பின்னால், பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை எது?

2. நடக்க தெரியாத பறவைகள் எவை என்று தெரியுமா உங்களுக்கு?

3. புற்றுநோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் எது தெரியுமா?

4. தயிராக மாற்ற முடியாத பால் எது?

5. நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம் எது?

6. சிங்கம் கர்ஜிப்பது எவ்வளவு தொலைவில் இருந்து கேட்கலாம்?

7. உலகின் மிகப்பெரிய பாம்பு எது? அது முட்டை இடுமா ?

8. ஒட்டகத்தை விட அதிக நாட்கள் குடிநீர் இன்றி வாழ முடிந்த விலங்கு எது?

9. மனித உடலில் வாழும் நுண்ணியிரிகள் எவ்வளவு?

10. துருவக்கரடிகள் பற்றிய ஏதேனும் வித்யாசமான குறிப்பு சொல்ல முடியுமா?

11. கூரான பிளேடின் முனையில் கூட அடிபட்டுக் கொள்ளாமல் கடந்து போக யாரால் முடியும்?

12. இவ்வுலகில் அதிக வகைப்பாடு கொண்ட உயிரிகள் எவை?

13. ஒரு புள்ளியின் இடத்தில் எவ்வளவு அமீபாக்களை நிரப்ப முடியும்?

இதோ விடைகள்:
1. தேன்சிட்டு
2. மரங்கொத்தி, தேன்சிட்டு போன்ற பறவைகளுக்கு
3. சுறாமீன்
4. ஒட்டகப்பால்
5. முதலை
6. 5 கிமீ தூரத்திலிருந்து
7. அனகோண்டா. முட்டை இடாது. குட்டி ஈனும்.
8. கங்காரு எலி
9. 17,000 வகை
10. அவை அனைத்தும் இடக்கை பழக்கம் உடையவை
11. நத்தை
12. நுண்ணியிரிகள்
13. 70,000 அமீபாக்கள்

நம்புங்க, இதெல்லாம் ஏதோ ஜெனரல் நாலெட்ஜ் புக்கில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் இல்லை. ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் 'உயிரினங்களின் அமைப்பு'ங்கற பாடத்துல இருக்கு. இப்ப எல்லாம் நாம படிச்ச மாதிரி புத்தகங்கள் இல்லை. ப்ரீயா இருந்தா இப்ப இருக்கற ஸ்கூல் புக்ஸ  படிச்சு பாருங்க. செம interesting ஆ இருக்கு. 

5 comments:

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ஹா... எந்தக்கேள்விக்குமே எனக்கு பதில் தெரியாதுன்னு தெரிஞ்சே பதிலையும் கொடுத்துட்டீங்களே... நன்றி..

selvasankar said...

arivu poorvamana kelvi pathilgal..appo namellam muthalla irunth schoolukku poganum polaye...nandri sagothari

சீராளன்.வீ said...

தயிராக மாற்ற முடியாத பால் எது?
அமலா பால் இல்லைத்தான்
ஆனால் அது தாயாக மாற்றக்கூடிய பால்..!

திட்டாதீங்கோ இது சும்மா...வம்புக்கு...!

ஒருசில கேள்விகள் நான் அறியாதவை இன்று அறிந்தேன் நன்றி

வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தெம்மாங்குப் பாட்டு....!! said...

Yes really, now a days school books very much informative and atractive..!! good writing..!!