Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, June 8, 2014

ஈழத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்

எனக்கு ஈழத்தில் யாரையும் தெரியாது

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த தோழன் தோழி கிடையாது

இப்படித்தான் ஈழம் இருக்கும் என்று
திரைப்படங்களிலும், பத்திரிகை செய்திகளில் இருந்தும் தான் தெரியும்.

ஈழம் பற்றிய செய்திகள் கோபத்தை உண்டு பண்ணும்
இயலாமையை உண்டு பண்ணும்
தலைக்குனிவை உண்டு பண்ணும்.

ஈழக் கொடுமைகளை படிக்க நேர்ந்தால் கண்ணீர் விடுவேன்
 
புலம் பெயர்ந்தவர்களின் நிலையைப் படித்தால் ‘பாவம்ல என்று இரக்கப்படுவேன்.

தமிழ்நாட்டில் இருந்தபடியே மானசீகமாக கைநீட்டி
இலங்கையில் இருக்கும் தமிழர்களை அணைத்து ஆறுதல் சொல்வேன்.

பிரபாகரன் எப்போது வருவார் என்று காத்துக்கொண்டிருப்பேன்.

மனித மிருகங்களை மானசீகமாக சுட்டுக்கொல்வேன்.

ராஜபக்ஷே சாக கடவுளிடம் வேண்டுவேன்.

அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்யாமல் இருந்தவர்களை ஆட்சி மாற்றுவேன்

இங்கே ஆசீர்வதிக்கப்பட்ட அமைதியை உணரும் போதெல்லாம்
இந்நேரம் என் மக்கள் அங்கே எப்படி இருப்பார்களோ என்று
அவர்களை நினைத்து ஏங்கி தவிப்பேன்.

இருந்தும் 
ஈழத்தமிழர் முகநூலில் friend request கொடுத்தால்
விடுதலைப்புலியாக இருக்குமோ என்று decline செய்வேன்.

வலை தளங்களில் ஈழம் பற்றிய செய்திகளை தவிர்த்து விடுவேன்

இந்த பதிவை பப்ளிஷ் செய்தால்
போலீஸ் வீடு தேடி வந்து
ஈழத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று
விசாரிப்பார்களோ என்று பயப்படுவேன்.

நான் என்ன செய்வது?
இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்.
ஏனெனில் நான் ஒரு டிபிகல் தமிழச்சி....


4 comments:

சாதாரணமானவள் said...

சகோதரர் ஒருவர் சற்று கோபமான வார்த்தைகளால் என் இயலாமையை கேலி பேசி இருந்தார். நானாவது இந்த பதிவை இட்டு என் இயலாமையை வெளிப்படுத்தி இருந்தேன். அவரோ பெயரை கூட வெளியிட தைரியம் இல்லாம அனானியாக வந்து தன் வீரத்தை காட்டி இருந்தார். அதனால் கமெண்ட்டை எடுத்துவிட்டு கமெண்ட் மாடரேஷன் வைத்து விட்டேன். அண்ணா ... இந்த தமிழ் நாட்டில் செங்கொடி, முத்துக்குமார் ஆகியோர் போல உயிரை கொடுத்தது கூட தங்கள் இயலாமையை வெளிப்படுத்தி தான்... இவ்வளவு பொங்கும் உங்களால் மட்டும் என்ன முடிந்தது? நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடவும். நேர்மையான வார்த்தைகளில் நீங்கள் டீசன்டாக வெளிப்படுத்தி இருந்தால் பிரசுரிக்கிறேன். இல்லை என்றால் நீங்கள் பொங்க வேறு ஏதேனும் இடம் பார்த்து செல்லவும். நன்றிண்ணா ...

தி.தமிழ் இளங்கோ said...

// நான் என்ன செய்வது?
இவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். //

உண்மையை உரக்கச் சொன்னதற்கு பாராட்டு!

Siva said...

Sema nethiyadi andha anonymousku

yathavan64@gmail.com said...

இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com