Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, December 28, 2012

சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். மால்குடி சுபா குரலில் அத்தனை உருக்கம்... காதல் கொண்ட ஒரு பெண்ணின் சோகமும்,விரக்தியும்,பயமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இந்த வரிகளை ரசிக்க நினைத்தால் ஒரே பாடலின் வரிகளாக (I mean தொடர்ச்சியாக) எடுத்துக்கொள்வதை விட  இரண்டிரண்டு வரிகளாக எடுத்து பிரேக் விட்டு ரசியுங்கள். நல்லா இருக்கும்.
song upload செய்ய முயற்சி பண்ணினேன். சரியா வரல. யாராவது லிங்க் கொடுத்தால் போட்டுடறேன்.


பாடல்:
பூ மீது யானை
பூ வலியை தாங்குமோ... 

தீ மீது வீணை
போய்  விழுந்தால் பாடுமோ... 

போ என்று சொன்னால்
வரும் நினைவும் போகுமோ... 

போராடும் அன்பில் அட
ஏன்தான் காயமோ...

கண்ணீர் கவிதைகள்  எந்தன் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளாய் எந்தன் கன்னம் நிறையுதே... 

இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே...
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே...

autumn, wallpaper, fantasy, wallpapers

ஹே... உடைத்து பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே...

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே..

உடைத்து பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே...

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே.. 

காதல் போலவே நோயும் இல்லையே  யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே...



விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ...

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ...

வேறு வேறென  நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்

அது சேரும் வரையிலே
யாரும் துணை இல்லே
ஆதி கால சாபம்...

வேகமா படிக்காதீங்கன்னா கேக்க மாட்டீங்களே... இப்படி படிச்சா இந்த பாடலில் உள்ள வலி எப்படி புரியும்? ம்? ஸ்க்ரோல் பண்ணி மேல போய்  மறுபடி படிங்க.


படம்: டிஷ்யூம்
இசை: விஜய் ஆன்டனி
பாடல்: புகழேந்தி



Friday, November 2, 2012

வெங்காளிமிளப்பு செய்யலாமா?

 நானும் குடும்ப இஸ்திரி ஆயிட்டேன்ல. ஒரு சமையல் குறிப்பாவது குடுத்தா தான இந்த உலகம் என்னை நம்பும் என்பதற்காக இந்த பதிவு.

சூடா சப்பாத்தி போட்டுக்கலாம். ஆனா தொட்டுக்க  குழம்பு, குருமா, சட்னி என்று ஏதாவது செய்ய வளையாது. இந்த மாதிரி சமயத்தில் சட்டென்று சமைக்க ஒரு ரெசிபி.

ஒரு பெரிய வெங்காயத்துக்கு ஒரு தக்காளி என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை சிறு சிறு துண்டங்களாகவும் நறுக்கிக்கொள்ளுங்கள். புதிதாக பழகுபவர் எனில் Chop board இல் கத்தியை கொண்டு நறுக்கினால் வேலை வெகு விரைவில் முடியும்.

அடுப்பில் வாணலியை வைத்து 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கட் செய்து வைத்துள்ள வெங்காயத்தை நன்கு வதக்கிக்கொள்ளவும். இனி பிரவுன் கலர் வரப்போகிறது என்று தெரியும் சமயத்தில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். 1 வெங்காயம் = 1 தக்காளி = 1/2 டீ ஸ்பூன் உப்பு என்ற கணக்கில் உப்பு சேர்க்கவும்.

1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் கோபுரம் போல எடுத்துக்கொள்ளவும். மிளகாய் பொடியை சேர்த்ததும் மறக்காமல் ஸ்டவ்வை குறைந்த தீயில் வைத்து வனக்கவும். இல்லாட்டி மிளகாய் தூள் பாத்திரத்திலேயே ஒட்டிக்கொண்டு டிஷ்ஷை கருக்கி விடும். மிளகாய் தூளின்  பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும்.

சப்பாத்தியை சுட்டு எடுத்ததும் இந்த கலவையை நடுவில் கொஞ்சம் வைத்து சப்பாத்தியை ரோல் செய்து பரிமாறவும்.

வெங்காயம் தக்காளி மிளகாய்த்தூள் உப்புசேர்ந்ததால் இதற்கு வெங்காளிமிளப்பு ன்னு பேர் வெச்சுட்டேன். எப்புடி !!!! (No bad words)

 நீட்டி நெளிச்சு செஞ்சா இதை செய்ய கால் மணி நேரம் ஆகும். நானா ட்ரை பண்ணி செஞ்சு பார்த்து  எங்க வீட்டுக்காரருக்கு கொடுத்தா அவர் 'அருமை அருமை' என்று சாப்டுகிட்டே இருந்தார். அந்த நம்பிக்கைல இந்த பதிவை போட்ருக்கேன்.

ஈசியா? கஷ்டமா என்று செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க
ஒரு வேளை  இந்த உணவில் நீங்கள் எதிர்பார்த்த அளவு ருசி இல்லையென்றால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். அதில் என் கைமணம் இல்லை என்பதே அந்தக் காரணம்  ;)