Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, August 7, 2012

புதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு

முந்தைய பதிவுகள்:
ப்ளாக் எழுதுவது எப்படி?
ப்ளாக் எழுதுவது எப்படி? இரண்டாம் பாகம்
New post சம்பந்தமான டிப்ஸ்

புதிதாக ப்ளாக் எழுத வருபவர்கள் தங்களுக்கென்று தனி தளத்தை உருவாக்கிக் கொள்வது  எளிதே. ஆனால் தங்கள் தளத்துக்கு மற்றவர்களை வரவைப்பது எப்படி என்பது தெரியாமல் குழம்புவார்கள். ரொம்ப சிம்பிள்ங்க. உங்கள் தளத்தை திரட்டிகளுடன் இணைக்க வேண்டும். இதற்கென்று பதிவுலகில் பிரபலமான திரட்டிகளாக இன்ட்லியையும், தமிழ்மணத்தையும் ஆனந்த விகடன் எனக்கு அறிமுகப்படுத்தியது.
https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQuGd-EaJ231Uzkttii3__iC21ObNHjSQ3Z5HbpcTsvjmPe_eD3JA
 
 
எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஒரு தளத்தை உருவாக்கியதும் ஆசையாக கூகுளில் போய் டைப் செய்து பார்த்தேன். வரவில்லை. எனக்கோ குழப்பம். சரி, பதிவாவது போடுவோம். யாராவது கமென்ட் போடுவாங்கன்னு வெயிட் பண்ணினேன். அந்த பக்கமா யாராவது வந்துட்டு போனதுக்கு கூட அறிகுறி இல்லை. அந்த சமயத்துல ஆனந்தவிகடன் ல ஒரு ஆர்டிகிள் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட திரட்டிகள் எனக்கு அறிமுகம் ஆகின.

 நாம் பதிவு எழுதினா பத்தாது, அதை படிக்க ஆளுங்க வரணும். அப்படி வரணும்னா எல்லாரும் வரும் இடத்தில நம்ம சரக்கை வைக்கணும். ஆயிரம் பேர் வர்ற இடத்துல ஒரு பத்து பேர் உங்க பதிவு பார்க்க வரமாட்டாங்க? அதுல ரெண்டு பேர் கமென்ட் போட மாட்டாங்க? அதனால நீங்க பதிவு எழுதினதும் உங்க பதிவை இது போன்ற திரட்டிகளில் இணையுங்க. இது ரெண்டு மட்டும் தான் திரட்டின்னு மத்ததுல இணைக்காம போய்டாதீங்க. மத்த பிரபல பதிவர்களுடைய பதிவுகளுக்கு கீழே இது போன்ற திரட்டிகளின் ஓட்டுப் பட்டை இருக்கும். அந்த திரட்டிகளை கூகுளில் டைப் செய்து அவற்றில் மெம்பர் ஆகிக்கொள்ளுங்கள். இனி நீங்கள் ஒவ்வொரு பதிவு போட்ட பின்பும், திரட்டிகளின் தளத்தில் submit செய்துவிடுங்கள். உங்க பதிவு பிடிச்சிருந்தா, படிச்சவங்க வோட்டு போட்டுடுவாங்க.
ஓட்டு போடறதுல என்ன நன்மைன்னு கேக்கறீங்களா? நிறைய பேர் வோட்டு போட்டா உங்க பதிவு அந்த திரட்டிகளின் முதல் பக்கத்துலயே உங்க பதிவை காட்டும். குறைவான வோட்டுனா கடைசி பக்கங்களில் காட்டும். இன்னும் சொல்லப்போனா உங்க தளத்துல விளம்பரம் தர வாய்ப்பு கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் உங்க கதவை தட்டும். ஆனா அதுக்கு நீங்க இங்கிலீஷ்ல பதிவு எழுதணும் . தமிழ்ல பதிவு எழுதினா விளம்பர லட்டு கிடைக்காது.
மேலும் ப்ளாக் எழுதுவது சம்பந்தமா ஏதாவது டவுட் வந்தா தயவு செஞ்சு என்னை கேக்காதீங்க. நான் அந்த அளவு எக்ஸ்பர்ட் இல்ல. நல்லா தெரிஞ்ச நண்பர்கள் இது குறித்து நிறைய பதிவு இட்டிருக்கிறார்கள் எனக்கு சந்தேகம்னா www.bloggernanban.com ல பார்ப்பேன். (இன்னும் நிறைய நண்பர்கள் உங்களுடைய தளங்களில் எழுதி இது சம்பந்தமா இருந்தால் இங்கே குறிப்பிடலாம் )

ஓகே... இப்ப களம் இறங்குங்க நண்பர்களே !All The Best!

8 comments:

MARI The Great said...

புதியவர்களுக்கு வழிகாட்டும் பதிவு!

அனைவருக்கும் அன்பு  said...

பயனுள்ள பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய நண்பர்களுக்கு பயன்படும்... தொடருங்கள்... நன்றி...

Thozhirkalam Channel said...

எல்லாம் சரி ஏன் நமது திரட்டியை இணைக்க வில்லை..?http://www.makkalsanthai.com/bloggers/

Unknown said...

பயனுள்ள பதிவு தொடருங்கள்... நன்றி...

Anonymous said...

பயனுள்ள பதிவு
தொடருங்கள்... நன்றி...

சாதாரணமானவள் said...

@ வரலாற்று சுவடுகள், கோவை மு. சரளா, தனபாலன், முத்து
நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ தொழிற்களம்
எனக்கு தெரியாததாலங்க...மன்னிச்சுடுங்க...