Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 7, 2010

பிரபுதேவா என்ன செய்வார்?

ஒரு நண்பர் தன் ப்ளாக் இல் எழுதி இருந்தார், இதற்கு முன் சரத்குமார், கமலஹாசன், பிரகாஷ் ராஜ்  மற்றும் பலர் மறுமணம் செய்து கொள்ளவில்லையா என்று. இவர்கள் அனைவரும் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு பின்பு தான் மறுமணமோ அல்லது இணைந்து வாழ்தலையோ (Living Together) செய்தார்கள். ஆனால் பிரபுதேவா விஷயம் அப்படி அல்ல. முறைப்படி விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறார். மேலும் இந்திய அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே அவரது விஷயம் கண்டிப்பாக மீடியாக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. தங்கள்  உறவை இப்படி வெட்கமில்லாமல் வெளிக்காட்டும் பிரபுதேவா நயன்தாரா ஜோடி , ஒருவேளை ரம்லத் சிம்புவுடன் (ஒரு சகோதரனாக நினைத்து) சுற்றினால் சும்மா இருப்பார்களா? நயன்தாராவை விடுங்கள்... அவருக்கு பிரபு இல்லாவிட்டால் கார்த்திக்.. ஆனால் பிரபுதேவா? தன் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்?

5 comments:

மதுரை சரவணன் said...

unmai thaan. thanks for sharing.

erodethangadurai said...

வரிகள் அனைத்தும் அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

சாதாரணமானவள் said...

thanks for madhurai saravanan and erode thangadurai

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Thekkikattan|தெகா said...

இது பொருத்து எல்லாம் எங்கும் நான் பேசுவது கிடையாது. ஏனெனில் தனி மனிதர்களின் வாழ்க்கையை நாம் பொதுவில் வைத்து டிஸ்கஷ் செய்வது நாகரீகமில்லை என்பதனையொட்டி.

இருப்பினும் இங்கே பேச வைத்த விசயங்கள்...

விவாகரத்து வாங்காமல் மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வது தவறுதான்.

//இந்திய அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. //

இப்படி கூறுவது மறு சிந்தனைக்கு முழுதுமாக உட்படுத்தப்பட வேண்டும். இந்தியாவிற்காக எல்லாம் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் என்னோட சந்தோஷத்தை தொலைத்துக் கொண்டவனாவேன்.

உறவு என்பது இங்கே பாருங்க... உண்மையின் விலை - கமல்ஹாசன்?

வலையுலகத்திற்கு வருக வருகவென வரவேற்று, நிறைய கவனிங்க, வாசிங்க வளருங்கன்னு வாழ்த்துக்கிறேன் :)